Saturday, April 23, 2005

பெண்ணாகிப் பூரித்த கணம்

அண்மையில் எனது நிறுவனத்தில் குடும்ப தினம் கொண்டாடப்பட்டது. பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வர, ஒரு தனியார் கிளப்பிற்குச் சென்றிருந்தோம். வழமை போல் அன்றைய மேடை நிகழ்ச்சிகளை நானே தொகுத்தளித்துக் கொண்டிருந்தேன்.

அதில் பல்வேறு போட்டிகளும் நடத்தினோம். ஒரு போட்டி ஆண்களுக்கான சேலை அணியும் போட்டி. இதில் அறிவிக்கப்பட்ட விதிகள் என்னவென்றால் ஆண்கள் மேடையில் எவ்வளவு சீக்கிரம் முழுமையாக சேலை அணிகிறார்களோ அதற்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும். ஆனால் அவரது பெண் துணை ஒலிவாங்கியைப் பிடித்தபடி என்ன அறிவுரை வழங்குகிறாரோ அதைக் கெட்டு அதை மட்டுமே பின்பற்றி சேலையை அணிய வேண்டும். ஆண்கள் தாமாக எதுவும் செய்யக் கூடாது. மிக சுவாரஸ்யமாய் இருந்தது. இந்த குறிப்பிட்ட போட்டி நடைபெறும் போது மட்டும் நான் மேடையின்
அருகிலிருந்த உடை மாற்றும் அறைக்குச் சென்று சேலை அணிந்து மேடைக்கு வந்தேன். (சிறு வயதிலேயே அம்மாவிடம் சேலை கட்டிக் கொள்ளக் கற்றிருந்தேன்.) அரங்கில் ஒரே சிரிப்பலை.

Image hosted by Photobucket.com


"புகைப்படம் எடுப்பவர் எங்கே? அவரிடம் முக்கியமான ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என்னைப் புகைப்படம் எடுத்து விடக் கூடாதென்று..!!" என்று நான் சொல்லிக் கொண்டிருந்த போதே அவர் ஆர்வத்துடன் முன்னால் வந்து 'க்ளிக்'கி விட்டார்.

என் முகத்தில் தெரிகிறதா? பெண்ணாகிப் பூரித்த ஒரு கணத்தின் மகிழ்ச்சி??

0 Comments:

Post a Comment

<< Home