Wednesday, July 14, 2004

சேர நன்னாட்டிளம் பெண்களுடனே...

கொச்சியின் ல மெரிடியன் ஹோட்டல் மிக அழகாக இருக்கிறது. (அங்கிருந்து தான் பதிகிறேன் இந்தப் பதிவை.) தென்னை மரங்கள் சூழ்ந்த லௌஞ்சை ஒட்டினாற்போல கேரளத்தின் தனிப் புகம் மிக்க Backwaters. ஒரு படகுச்சவாரியில் அழைத்துப் போகிறார்கள். விடுமுறையில் வந்தால் போய் வரலாம். அலுவலகப் பணிகளுக்கிடையில் அதற்கு நேரமெடுக்க முடியவில்லை.

பெங்களூரிலிருந்து ஃப்லைட்டில் வரும்போதே ஜன்னல் வழியாகப் பார்த்தால் எங்கெங்கு நோக்கினும் ஆறு, Backwaters, கிளை நதி என்று ஒரே நீர்நிலைகளின் ஆதிக்கம். தமிழ்க்கண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்காத குறை.

இங்கே படகுச்சவாரியைப் பார்க்கும் போதெல்லாம் பாரதியின் வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோடிகள் ஓட்டி விளயாடி வருவோம்

மாலை நேரம், ஹோட்டல் லாபியில் தலை முதல் கால் வரை தென்றல் வருடிக் கொடுக்கும் ரம்மியமான வேளையில், கொஞ்சம் கொஞ்சம் நம்ம ஆள் ஜோ சாயலில் இருக்கின்ற ரிஸப்ஷனிஷ்டை ரசித்தபடி கவிதை எழுத வருகிறதாவென்று முயற்சி செய்து பார்த்தேன். ம்ஹூம்..!!

பாரதி சொன்ன மாதிரி, வந்தாளென்றால் தோடிகள் ஓட்டி விளையாட வேண்டுமானால் போகலாம் போலிருக்கிறது.

("கவிதையையே தடுமாற வைத்த கவிதையே" என்றெல்லாம் நான் எழுதினால் அதைக் கவிதையென்று நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்களென்று தெரியும். அதனால் தான் அநதக் கவிதை எழுதின தாளைக் கிழித்து Backwaters-ல் வீசி விட்டேன்.)

1 Comments:

Blogger ரவியா said...

கொஞ்சம் நம்ம ஆள் ஜோ சாயலில் இருக்கின்ற :))

July 16, 2004 12:29 AM  

Post a Comment

<< Home